மறந்துவிட்டதாய்

கிண்ணச் சோறுகளில்
எண்ணை பூசிய உணவுகள்
அடமற்ற பிள்ளையாகி
அன்பூட்டத் தின்றேன்.
நிலவு கோபிக்கவில்லை
பூச்சாண்டிகள் தோன்றவில்லை.

காலத்தை நீராய்
ஒழுக்கிய அரக்கனால்
ஊட்டல் குறைந்து
ஊட்டம் மிகுந்து
காளையன் நான் அவள்
கழுத்தைத் தாண்ட
பிடி விலகிய கயிறாய்
நழுவல் கண்டேன்.
உண்டவைகள்
செருக்கெடுத்து ஓடியது.

நித்திரைக் கனவுகள்
தாண்டிப் போய்
நிஜக் கனவுகளைத்
தோண்டி
வாழ்விலொருத்தி
வந்து சேர்ந்தாள்
வாழ்விலொருத்தி
இழக்கக் கண்டேன்

முன்பெல்லாம் பசிக்கையில்
அம்மா என்பேன்.
இன்று தேடுகிறேன்
மனைவியை!

Comments