உறுத்தியதொன்று...

துயில் களைந்த
ஆதவன்
தூக்கி எறிந்த
கதிரெல்லாம்
கயல் ஓடிய
கண்மணியைக்
கட்டியணைத்ததுவே

உலர்ந்த மேனியை
நீர்கொண்டு
புலர்த்திய பின்னாலே
முடக்கிய சோம்பலை
முடுக்கிய தென்றலாய்

ரோமங் கலைந்து
நிலைக் கண்ணாடியில்
மேவிச் சீவி
வறத்த வதனத்தில்
பொடியெடுத்துப்
புலர்த்திவிட்டு
நெஞ்சு நிமிர்க்க
நேரம் தவிர்க்க

கண்மணி
ஓடி வந்தாள்.

சில்லறைபெற்று
சிரிப்பொன்று நாட்டினாள்.

ஒருவனிடம் வாங்கியிருந்தால்
மகிழ்வொன்று பூத்திருப்பேன்.
என்று நெக்கிய நெஞ்சத்தை
புதைக் குழியில் புதைத்துவிட்டு
பொய்ச் சிரிப்பை
விடைக்கனுப்பினேன்.
சூத்திரங்கள் அறியாது
போகிறாள் என் மகள்..

Comments