ஆறா ரணம் - செவிகள்

கழிநெடிலடிவெண்பா

புள்ளிசை கேட்டறிந்த காதிலே நீயும்தான்
உள்ளிருந்து ஊற்றுகிறாய் ரத்தக் குழம்பு
கமழக் கமழச் கவிகள் படித்ததை
என்செவி உற்று அறிந்ததே கேளாயோ
உன்வார்த்தை கண்டென் செவிமுடி எல்லாம்
நடனங் களித்த கதைமாறி யின்று
சடலமாய் போனது வெந்து அவைகள்
அதரவில் லாலே குதறவும் கொண்டாய்
பதமொரு காதல் பிழியவும் கண்டாய்
நிதமொரு காவியம் காதுகள் கேட்கும்
தொளைத்து விடுவாயோ நீகாதல் கொண்டு
செவிகளை மீறி நுழைகிறது அன்று
புவியைச் சருக்கிய வார்த்தைக ளாலே
கவிதைகள் கண்ணீர் விடுமேபார் காகிதம்
சாகும் குருதி படியுமடி வற்றி
கதையை நிறுத்தடி சற்றே!

Comments