வேவுகணைகள்

உன் மீது எனக்கு
அதீத அன்பு
தின முத்தங்களால்
மனம் நிறைந்து
புதுமலராய் நிற்கிறேன்.
என் முகம் பார்க்கும்
இத்தனை பேர் மத்தியில்
உன் சிலரால் மட்டுமே
காதல் புரிய முடிகிறது.

உனக்கெனவே
ஒதுக்கப்பட்ட இடத்தில்
எனக்காக கவியெழுதுகிறாய்
கதை பேசுகிறாய்.
சில சமயங்களில் கிண்டலாக
கொஞ்சுகிறாய்.
ஏதாவதொரு நொடியில்
கோபம் வந்தால்,
என் கண்ணசைவில்
நிறுத்திக் கொள்கிறாய்!

அவ்வப்போது
விண்கற்கள் தாக்கும்.
உனக்கும் எனக்குமுண்டான
ஈர்ப்புவிசை அறியாமல்.

வேவு பார்க்கும்
சில கழுகுகள்,
நம் உறுதியறியாது
கண்கள் பொசுங்க
ரணப்பட்டு போகிறது.

நம் பந்தம் பிரிக்க முடியாதது.
வேவுகணைகள்
எத்தனை வந்தபின்னும்....

Comments