சித்திரைக்கனி

ஊருக்குள்ள ஒண்ணுமில்ல
ஊத்திக்கவோ தண்ணியில்ல

பல்லுங் காஞ்சி பதிநாளு ஆச்சு
பத்துங் கரஞ்சி போயாச்சு

என்ன எழவுக்கு இந்த கொண்டாட்டம்?

மீசை முறுக்கி வாயோரம்
காச மெரட்டி கழுத்தோரம்
ஓச இல்லாம கத்தி வெச்சாப்ல

வேணுமோடா எனக்கு?

வெளக்குத் திரிக்கு லோல்பட்டு
பக்கத்து வீட்டுக் காரன்கிட்ட
பத்து ரூபா கடன் நான் வாங்க,

வட்டியில்லாம எங்கிட்ட
தருமகர்த்தா அன்பளிப்பா?
வேணுமோடா எனக்கு
சித்திரைக் கனி
நிறுத்துக்கோடா
பணம் பொறட்றது இனி.

Comments