செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தம்

குருதியைக் குடித்துக்கொண்டு
இறுதியைத் தேடி அலையும்
அகோர நெஞ்சம் இவனுக்கு..
களத்திலே எதிர்க்க வலுவில்லை ;
மறைமுகமாய் தாக்கிவிட்டு
தான் யாரென்று அறியாமலிருக்கிறான்..

தன் வீடு நன்று என்றாலும்
எதிர் வீட்டை சேதப்படுத்துகிறான்
எதிரியைக் கூட மன்னிக்கலாம்
என்று சொல்வார்கள்
எதுவும் இல்லாதவனை
எப்படி மன்னிப்பது?

மதில்களில் கீறல் ஏற்படுத்தி
வீட்டைக் காயப்படுத்தும்
வீணனுக்கு வேலையே
தென்படும் இதயங்களைப்
பிழிவதுதான்..

மென்மை என்ற அர்த்தம்
நெஞ்சில் இல்லை.. ஆனால்
வேசம் மட்டும் மென்மையாகப்
போடத் தெரிகிறது
இந்த கூனிக்கு..

தன் வீட்டுப்பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கித் தருகிறான்
தெருவில் சுற்றித் திரியும்
மலர்களை, பிண்டம் இல்லாமல்
நசுக்கத்தான் பார்க்கிறான்..

இலக்கு என்பது இங்கே
இல்லை என்றாலும்
போட்டிக்கு வந்து
புறமுதுகிடப் போகிறான் பார்!

Comments