வஞ்வம் மிகுந்த வண்டுகள்

நானும் ஓவியாவும்

விழுதுகளின் நீளமும்
வேர்களின் ஆழமும்
இலைகளின் பசுமையும்
இதமாகக் கொண்டு
கிளைகளைப் பரப்பி
எண்ணற்ற விழுதுகளைப்
பெற்றிருக்கிறது
தன்னலமில்லா ஆலமரம்

ஆழ ஊன்றி நிற்குமிந்த
ஆல மரத்தின்
அடிவேர்களை
நோண்டப்பார்க்கிறது
நெஞ்சமில்லா உயிர்கள்

மரத்தைச்
சாய்ப்பதாக நினைத்து
இடுக்குகளில் படர்ந்திருக்கும்
அழகிய பூக்களையும்
கொத்தப்பார்க்கிறது
வஞ்வம் மிகுந்த வண்டுகள்..

வேர்களைப் பிடுங்க இருக்க
பூக்களைக் கொத்துவது
எந்த விதத்தில் ஞாயம்?

புன்னகையை மறந்து
தன்னிலையைத் துறந்து
கொத்தும் வண்டுகளுக்கு
விழுதுகளின் ஒரு அடி போதும்//

ஆலமரம் விழித்துக்கொண்டால்
துச்சமான இவ்வண்டுகளின் கதி
என்ன என்று யாருக்குத் தெரியும்?

விழுதின் ஒரு நுனி
கண் விழித்துக்கொண்டது,
கணைகள் தொடுக்க புறப்பட்டுவிட்டது.

இனியும் வேர்களை நோண்டினால்
அக்னிக்குஞ்சுகளுக்கு
பலியாகவேண்டியதுதான்...

Comments