தாத்தாவின் பார்வை

நானும் ஓவியாவும்.

கோளத்தின் அலையாய்
முகம் தெரியும் மழைக் காலத்தில்
நடைபாதை கழிவுகளை
ஒதுக்கிவிட்டு
நனைக்காமல் இருக்க
குடையோடு தவழ்ந்துகொண்டிருந்தேன்

கண்கள் கண்டவரை
யாவரும் குடையுடன்
தலை காக்கின்றனர்
மழையின் அழுகையை
கண்களிலிருந்து வீசிவிடுகின்றனர்

ஒரு சிறு இடைவெளியில்
தள்ளுவண்டியுடன்
நிற்கும் அந்த தாத்தாவைக் கண்டதும்
மழைக்குக் கூட
இரக்கமின்றி போனது.
என் கைகள்
குடை பொத்தானைத் தழுவுகிறது.

எடுத்துச் சென்று கொடுக்க
யாவருக்கும் மனமில்லை
ஒரு முதியவரைக் காக்க
மழைக்கும் துணிவில்லை
விதிவிலக்காக நான்.

மழையின் ஆக்ரோசத்தை
மனம் தழுவிய அதேவேளையில்
உடல் நனைந்தது.
பிந்தைய நாளில்
என் மொழிகள்
வேறானது.

பகல் பொழுதுகளில்
இரக்கமற்ற அதே இடத்தில்
நடக்கையில்
தாத்தாவின் அருகே என் குடை
நிழற்குடையாய்.

நிறம் மாறும் மனிதர்கள்
குணம் கரையும் மழை
தாத்தாவின் பார்வை மட்டும்
நிதர்சனமாய் நிற்கிறது.

நன்றி ஓவி.. கவிதைக்கருவிற்க்கு..

Comments