பகுதி 8

உயிர் உடலோடு
சேர்ந்தால்தானே மனிதன்?
முயற்சிக்கலாமே என்று
படுத்திருந்த உடலோடு
ஆவியான இவள் படுத்தாள்..
ஆனால் எதுவும் நடக்கவில்லை..
கைகளை ஆட்டிப் பார்த்தாள்.
தலையை நீட்டிப் பார்த்தாள்.
ம்ஹீம்...
அச்சமயம் பார்த்து
தலைமை மருத்துவர் வந்து சேர்ந்தார்..
கோமாவில் படுத்திருக்கும் உடலை
எடுத்து சென்றுவிடுமாறு
பூங்குழலியின் அக்காவிடம் சொன்னார்,,,
அனைத்தையும் கேட்டறிந்தாள்
அவர்களுக்கு மிக
அருகே நின்றுகொண்டே...

மெல்ல அவனோடு சோர்ந்தவாறு
வீடு சேர்ந்தாள்...

கவிதை சேர்க்கும் மொட்டை மாடியில்
எண்ணங்களை உலவ விட்டார்கள்,,
எண்ணங்கள் காதலித்தால்
இவர்கள் காதலர்கள் தாம்..
ஆவியுடன் காதலா?
எண்ணலாம்...
சொல்லியிருக்கிறார்களே
"காதலுக்கு கண்ணில்லை,
காதில்லை
மூக்கில்லை
முழியில்லை "என்று...

கதிரவன் ஒரு முடிவு செய்தான்
உடலைத் திருடி வந்துவிட....
என்றாவது ஓர்நாள் உயிர் இணையுமல்லவா,,

நண்பன் உதவியால்
மெல்ல மருத்துவமனை சென்றான்
நாசியைப் பிடுங்கும்
நாற்றம் கமழும் இடம் இது..
மூக்கைப் பிடித்தவாறே
ஒரு பூனை போல சென்றார்கள்..
இது என்ன மடமா? சத்திரமா?
மருத்துவமனை..
காவலின்றி போகுமா?
கடத்தலில் புதியவன் என்பதால்
கதிரவன் தவறிழைத்துவிட்டான்.
காவல் காரர்கள் சுற்றி வளைத்தார்கள்..
இருப்பினும் அவள் உடல் அடங்கிய
சக்கர மெத்தையை உசுப்பி
அங்கிருந்து அகன்றான்.
ஆனால் பிடிபட்டான்...

கோமாவிலிருந்த குழலி
இந்த கூச்சல் குழப்பங்களுக்கிடையில்
இறந்தே போனாள்...
நினைவுகளின் இறப்பால்
உடலைவிட்டு பிரிந்த நினைவுகள்
உடல் போனது நினைவுகளும் போயிற்று..

Comments