தெரிகிறதா உன் ஏமாற்றம்?

சிலகாட்சிகளுக்கு நான் மரியா கரேவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன்...கவிதை என்னுடையது; கரு அவளுடையது.

சர்ச் வாசலில் புடைசூழ
பேண்டு வாத்தியங்களின்
இசையில், காது செவிடாக
என் கண்கள் குருடாக்கப்பட்டு
தயாராக நிற்கப் படுகிறேன்
முற்றிலும் புதிதான
வெள்ளை கவுனோடு!

என் கைகளில் பூத்த வியர்வைகள்
சூடேறத் தொடங்குகிறது.
உன் வருகையில்
மேலும் என்மனமானது
நொந்து போகிறது..
பொய்யான சிரிப்பால்
கரையான பற்களைக்
காட்டி விட்டு
என்னருகே நிற்கிறாய்
நாற்றங் கலந்த பிணமாக..

பாதிரியாரின் வார்த்தைகளுக்கு
உதடுகள் மட்டும் பதில் சொல்கிறது
உள்ளம் முற்றிலும் மறுக்கிறது.
நீர்த்துளி விழுகையினை
காதலன் பிரிவு என்றெண்ணாமல்
பொய்யான பவுடர் பூசிக்கொண்டு
சுற்றி நிற்கிறார்கள்
சுற்றத்தார்கள்.

உள்ளத்தின் மறுப்பு
உதடு வரை வருவதற்கும்
மேல்கையில் துடைத்துவிட்ட
கண்ணீரின் வெப்பம் ஆறுவதற்கும்
சற்று நேரம் பிடித்தது,

தூரத்தில் சிவப்பு வண்ணக்
காரில் அதோ! வருகிறான்
என் மனதை முற்றிலும் அறிந்தவன்
உன் நெஞ்சு மாறுகிறதா
காட்சி மாற்றத்தால்?
காரிலிருந்து இறங்கியவன்
காதல் கண்களைக் காட்டி
கை நீட்டி
என்னை அழைக்கிறான்.

உன்னோடு வாழ்வதும்
அவனோடு சாவதும் ஒன்றுதான்
என் பாவாடைக் கவுனை
இழுத்து பிடித்தவாறு
அவன் நீட்டிய விரல் நோக்கி
ஓடுகிறேன்..
நீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு..

அவன் சிரிப்பில்
என் உலகமே மாறிவிட்டது.
கர்த்தர் இன்னும்தான் இருக்கிறார்.

உன் ஏமாற்றம் இப்போது
உனக்குத் தெரிகிறது.
பெண் ஏமாற்றம் எப்பவும்
இப்படித்தான் இருக்கும்....

Comments