முதல் சிறுகதை

முன்னொரு காலத்தில் சிவமலைக்கு அடிவாரத்தில் உள்ள நாடான நேசபுரத்தை மன்னன் தடந்தோழன் ஆண்டு வந்தான். ஆட்சியில் எந்த பங்கமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. அமைச்சர்கள் புலவர்கள் வியாபாரிகள் ஆகிய எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
மன்னம் தடந்தோழனின் தந்தையால் உருவானது இந்த அரசு. அதனால் மன்னன் எந்த ஒரு போரிலும் பங்கேற்காமலும் வீணாக போருக்குப் போகாமலும் ஆட்சி செய்தான். இருப்பினும் கத்திச் சண்டை, வில் சண்டை, போன்ற எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.

ஓர்நாள், எதிர் நாட்டு மன்னன் விஜயசேடனுக்கு அரசை விரிவுபடுத்தும் எண்ணம் வரவே பக்கத்து நாடான நேசபுரத்தை மடக்க திட்டமிட்டான்.. அதன்படி ஒரு புறாவின் காலில் ஓலையைக் கட்டி தூது விட்டான்.. அந்த புறா பறக்கும் வழியில் ஒரு வேடனால் வேட்டையாடப்பட்டது.. இதனால் செய்தி போய்ச் சேரவில்லை.. விஜயசேடனுக்கோ கோபம்.. அதனால் படையெடுத்து வந்து நேசபுரத்தை முற்றுகையிட்டு அங்குள்ள பசுக்களை இழுத்துச் சென்றான்.. தடந்தோழனுக்கு அப்போதுதான் விசயமே தெரியும். ஆகையால் பதறியடித்து ஓடி வந்து செய்தி அனுப்பிப் பார்த்தான். ம்ஹூம்... போர்தான் என்று முடிவாய் சொல்லிவிட்டான் விஜயசேடன்.
தட்ந்தோழனுக்கோ எல்லா கலையும் தெரிந்திருந்தும் போர் அனுபவமில்லாத அச்சம் பீடித்துக்கொண்டது. போர் உடை தரிக்கவே பயந்துகொண்டான். அவனின் பயத்தைக் கண்டு மற்ற அமைச்சர்களும் பயம் கொண்டார்கள். தளபதிகள் அரசனின் உத்தரவுக்காக காத்திருந்தார்கள்.. குழப்பங்கள் நெடுநேரமாக நீடித்தது.
அதுவரையிலும் ஊருக்கு வெளியே காத்திருந்த விஜயசேடனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை.. படைகளுக்கு உத்தரவிட்டான். அவனின் படைகள் ஆராவாரத்துடன் கோட்டைக் கதவுகளை உடைத்தெரிந்து உள்ளே போனது.. சற்றும் எதிர்பாராத நேசபுரத்து அரசனோ தளபதிகளை ஏவிவிட்டு படைகளை அடக்குமாறு உத்தரவிட்டான். ஆனால் தளபதிகளின் உத்தரவுக்கும் நேரமில்லாமல் விஜயசேடன் படைகள் துவம்சம் செய்து நாட்டைக் கைப்பற்றியது. மேனியெல்லாம் நடுங்க நடுங்க நின்று கொண்டிருந்த தடந்தோழனை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு அவனை அரசவைக்கு கொண்டு சென்றான்.. தலை கவிழ்ந்து நின்று கொண்டிருக்கும் தடந்தோழனைப் பார்த்து விஜயசேடன் சொன்னான்" மன்னா! என்னதான் நீ போருக்கு வரவில்லை என்றாலும் உன் ஆட்சி மிக நன்றாக இருந்ததாக கேள்விப் பட்டேன். என்னதான் திறமையாக போர் செய்தாலும் எனது ஆட்சி உன்னைப் போல் இல்லை.. ஆக மக்களின் தலைவனான உன்னையே மீண்டும் அரசனாக்கிச் செல்லுகிறேன்.. ஆனால் ஒரு விபரம்! என்னுடைய அடுத்தடுத்த போர்களுக்கு நீ தலைமை தாங்கவேண்டும்" என்று உத்தரவிட்டான்.
தடந்தோழன் மனம் நெகிழ்ந்தான். போதிய போர் அனுபவம் நாட்டைக் காக்கும் என்பதை புரிந்துகொண்டு உத்தரவுக்கு கீழ்படிந்தான். மன்னரும் அன்றைய பொழுதையும் சிறப்பாக கழித்துவிட்டு தம் நாட்டுக்குச் சென்றார்.....

குழந்தைகளே! மேற்கண்ட இந்த கதையில் தெரிவது.........
  • நம் பொறுப்புகளை நாம் சரிவர செய்யவேண்டும்
  • போதிய அனுபவத்தை சிறுவயதிலிருந்தே வளர்த்திக் கொள்ளவேண்டும்
  • அச்சம் தவிர்க்கவேண்டும்
  • நம்மை விட வேறொருவன் சிறப்பாக செயல்களை செய்யும் போது அதற்கு மதிப்பளிக்கவேண்டும்

Comments