உறக்கமில்லாத கனவுகளுடன்
மேக வண்ணத்தில் அலைகிறேன்
நிமிர்ந்து சற்றே இமை திற
உனக்காக ஒரு விழி
கண்மூடாமல் காத்திருக்கிறது.


என் கணகளிலிருந்து விழும்
ஒவ்வொரு பூவும்
கனியாகவே முற்படுகின்றன
காய்பருவம்
கண்ணுக்குத் தெரிவதில்லை

தங்கிய பறவையை துரத்தி விட்டு
தொங்கிய கப்பியில் கயிற்றை விட்டு
நங்கை இவள் கண் கிணற்றில் விட்டு
டங்"கென சத்தம் கிணற்றை விட்டு

Comments