இரு சகோதரர்கள்

முன்னொரு காலத்தில் வாஞ்சி எனும் ஊரில் தம்புடையான் என்ற முதியவர் வசித்துவந்தார். அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் பெயர் விக்கிரமாதித்தன் இன்னொருவன் பெயர் வாங்கிரமாதித்தன்.
பெயருக்கேற்றார்போல் விக்கிரமாதித்தன் எந்த பொருளையும் உருப்படியாக வைத்திருக்கமாட்டான். அப்போதே விற்று காசை கரியாக்குவான். ரெம்ப சோம்பேறி. தொடைநடுங்கி வேறு......
இவனுக்கு நேர்மாறாக இருந்தான் வாங்கிரமாதித்தன். நல்ல புத்திசாலி..

ஒருநாள்-இரவு
இருவரும் காட்டில் பேசிக்கொண்டே நடந்தார்கள். அடுத்த ஊருக்குச் செல்லவேண்டும். ஏதாவது சத்திரம் இருந்தால் நல்லது என்று துலாவிக் கொண்டே வந்தார்கள். ஓர் இடத்தில் வெளிச்சம் கண்ணுக்குப் படவே, இருவரும் வேகமாக அந்த இடத்திற்கு அடைந்தனர். அது பாழடைந்த சத்திரமாக இருந்தது. உள்ளே சிலர் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். இரு மாதித்தர்களும் குளிரால் நடுங்கினர்.அப்படியே உட்காரும் போது ஒரு சத்தம்..

"டேய் என்னங்கட பண்றீங்க"
குரல் தடித்து காணப்பட்டது.. இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது
இருந்தாலும் வாங்கிரமாதித்தன் மட்டும் தைரியமாக குரல் கொடுத்தான்..
" யாருங்கண்ணா? "
"சத்திரத்தோட முதலாளிடா நானு"
"அண்ணா! இங்க கொஞ்ச நேரம் தங்கிக் கொள்கிறோம் விடியலைக் கண்ணில் காணா முன் நாங்கள் சென்று விடுகிறோம்" என்றான்
" சரிசரி ரெண்டுபேரும் மாடியில இருக்கிற உதவியாளர்கிட்ட பேரக் கொடுத்து பதிவு பண்ணிக்கோங்க.. நெறய திருட்டு நடக்குது இங்க.. "
"சரிங்கண்ணா!" இருவரும் கோரஸாக சொல்லிக் கொண்டு நடந்தார்கள்

மாடிக்குச் சென்றால் அங்கே ஒரு பெருங்கூட்டமே நின்றுகொண்டிருந்தது... அது கொள்ளைக் கூட்டம். இருவரையும் வளைத்துப் போட்டது. தொடை நடுங்கி நடுங்கிக் கொண்டே இருந்தான்.. வாங்கிரமாதித்தனோ எப்படி தப்பிப்பது என்று யோஜனை செய்தான். இருவரின் உடமைகளை சோதனை செய்தார்கள் ஒன்றுமே அகப்படவில்லை. அதனால் கொள்ளைக்கூட்டத் தலைவன் இருவரிடமும் மிகுந்த கோபமாய் இருந்தான்.. அந்த நேரத்தில் வாங்கிரமாதித்தன் ஒரு காரியம் செய்தான். தான் மறைத்து வைத்திருந்த சில நாணயங்களை தானாகவே வந்து கொடுத்தான் கொ.கூட்டத் தலைவனிடம்..
அப்படியே, "அண்ணா என்னிடம் மட்டுமே பணமுள்ளது. அவனை விட்டுவிடுங்கள் அவன் எனது தம்பிதான். அவனுக்கு நான் எப்படியாவது பணம் ஏற்பாடு செய்து தந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள் " என்றான்.
தலைவனோ கொஞ்சம் யோசித்துவிட்டு. எப்படியும் தம்பிக்காக இவன் வந்துதானே ஆக வேண்டும் என்று வாங்கிரமாதித்தனை மட்டும் விட்டுவிட்டான். விக்கிரமாதித்தனோ கொஞ்சமும் யோசனையில்லாமல் கூச்சல் போட்டான். அண்ணனைத் திட்டித் தீர்த்தான்.. அதோடு அவர்களிடம் உதையும் வாங்கிக் கொண்டான்.
வாங்கிரமாதித்தன் உடனே வெகுவேகமாக் ஓடினான். பக்கத்து ஊரில் உள்ள ஊர்காவல் படைக்கு விபரம் சொல்லி கூட்டி வந்தான். சத்திரத்தில் சப்தமில்லாமல் படையினர் நுழைந்தனர்.. முதலில் சத்திர முதலாளி என்று சொன்னவனை பிடித்து கட்டினார்கள் பின் மாடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கொள்ளைக் கூட்டத்தினரை அப்படியே வளைத்துப் பிடித்தனர்.
அண்ணன் நம்மை ஏமாற்றவில்லை என்று தம்பி சந்தோசமாக கட்டி பிடித்துக்கொண்டான். ஊர்காவல் படையினர் வாங்கிரமாதித்தனை நன்றாக பாராட்டினர். கொ.கூ. தலைவன் நொந்தவாறே கைதியாய் சென்றான்.
பின் நிம்மதியாக தூங்கி அடுத்தநாள் காலை எழுந்து பக்கத்து ஊருக்குச் சென்றனர்கள் இந்த சகோதரர்கள்....

குழந்தைகளே இந்த கதையிலிர்ந்து நீங்கள் அறிவது:
  • தொடைநடுங்கியாக இருக்காமல் தைரியமாக இருக்கவேண்டும்
  • சகோதரனை சந்தேகப் படுதல் கூடாது
  • எந்த சூழ்நிலையிலும் நன்றாக யோஜனை செய்யவேண்டும்
  • முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இரவு நேரத்தில் தங்குவதற்கு முன் யோசனை செய்யவேண்டும்..

Comments