இரவுக் காதலி

இமை மூடினாலும் மறுக்க
இயலும் போது மனம்
இறுக்க முடிகிறது.
இருந்தும் பிரியோசனமில்லை
எதிரில் இருக்கும் உருவங்கள்
கண்களால் பார்த்தால் புரிகிறது
மங்கலான பார்வையில்...
தோழா! மூடிவிடு என்பது போல்
தினம் ஒரு சப்தம்
காது வழியே அல்லாமல்
கேட்கமுடிகிறது

தேவி அட்கொள்ளுகிறாள்
அவளின் கட்டுப்பாட்டில் கடைசியில்
வந்துதானே ஆக வேண்டும்
இரவு நேரத் தாலாட்டாய்
சோகமாய், காதலாய்,
தேவி அளித்த காட்சி ரணங்கள்
அவளை மீறிய அடக்கம்
இமைகளின் சக்தியறிந்த
இவளூக்கு எங்கிருந்து வந்ததோ
படங்களூம் பாடல்களும்??
இறுதியும் இமை மூடல்தான்
என்றறிந்து இனியும் மூடாமல்
இருப்பதை முடித்துக் கொண்டேன்,,,

Comments