என்ன உலகமிது?

சிருங்கார பவுடர் பூசிக்கொண்டு
அகோரப் பற்களின் நகைப்பில்
தெருப்பெண்களை நசிக்கிறார்கள்
அடங்கலில்லா காழ்புணர்வு கையில்
கொட்டமடிக்க, காமம் மிகுதியிலே
தாயும் நசுங்குகிறாள் இவர்களின்
புளுத்துப் போன மூளையினால்


நானிருக்கிறேன் கவர்ச்சிக்கென
ஆளாளுக்கு உடைத் தள்ளுபடி செய்து
சூனியம் செய்கிறார்கள்
வெந்தும் வேகாத நடிகைகள்
என்றாவது ஒருநாள் குடிக்காமல்
இருந்துவிட்டு, எய்ட்ஸ் குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்குவார்கள் தொடை தெரிய
கூளைத் தன்மையுள்ள கூனிகள்


பாட்டிலிலே குடி குடியைக் கெடுக்கும்
குடித்தபின் குடி கொடையைக் கொடுக்கும்
நாசமும் நாய்பிறப்பும் குடியிலே மூழ்கி போகிறது
தாலியும் தன் பெண் டாட்டியும் அடகிலே போகிறது
போலியும் புளுகும் தண்ணீரிலே
வேசிப் பொழப்பு கண்களிலே
வெறும் பேச்சுக்கு வாழும் பண்டாரங்கள்


பொறுத்துப் போய் தனியார் ஆசுபத்திரிக்கு
போனால், டாக்டரோ
வெறுத்துப் போய் நோயாளியைப் பார்த்து
லட்சம் கொண்டுவா என்பான்
கறுத்துப் போன இவன் வாயில்
நாம் கொடுத்தும் சாவான் நோயாளி
அறுத்துப் போகாது போகிறோம்
அவன் பிறப்பு உரிமையை
ஊனமுற்ற பிணமாய் உட்காருவான் ஈஸி சேரில்
கொழுத்துப்போன கிழட்டுக் கழுதைகள்


மொட்டையடித்து மூளியாக்கி
பொட்டைப் பயல்கள் காரில் போவார்கள்
துட்டை எடுத்து ஏழைக்குத் தரா நீசர்கள்
விட்டைத் தின்னும் பன்றிகள்
எங்காவது ஷாப்பிங் சென்றால்
துட்டு இறைப்பார்கள் தண்ணீராய்
கொட்டமடிக்கும் புலையர்கள்*


என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!

எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!





* புலையர்கள் என்றால் கீழ்சாதி..... ஜாதியைக் குறிப்பிடவில்லை..........

Comments